அனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்

அனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்
hanuman-slokas


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753


அனுமனுக்கு உகந்த இந்த துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

அயோத்யாநகர ரம்யே ரத்ன ஸௌந்தர்ய மண்டபே
மந்தாரபுஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
ஸிம்ஹாஸந ஸமாரூடம் புஷ்பகோபரி ராகவம்
ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதை:ஸுபை:
ஸம்ஸ்தூயமாநம் முநிபி: ஸர்வத: பரிஸேவிதம்
ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோபஸோபிதம்
ஸ்யாமம் ப்ரஸந்நவதநம் ஸர்வாபரண பூஷிதம்

பொதுப்பொருள்:

அயோத்தி நகரத்தில் ரம்யமான ரத்ன ஸௌந்தர்ய மண்டபத்தில் மந்தாரம்போன்ற பலவிதமான புஷ்பங்களால் ஆக்கப்பட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் சீதா, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனோடு மேகவண்ணத்துடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் சர்வாலங்காரத்துடன் காட்சி தரும் ராமபிரானை வணங்குகிறேன்.

இத்துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் தரும்.

மழை பொழிய வைத்த ஆறுமுக சுவாமி

மழை பொழிய வைத்த ஆறுமுக சுவாமி
siddhar-worship


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெரியநாயகம் பிள்ளை - பொன்னம்மாள் தம்பதிகளுக்கு ஆறுமுக சுவாமி மகனாக பிறந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெரியநாயகம் பிள்ளை- பொன்னம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லை. மகப்பேறு வேண்டி பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடினர். இறுதியில் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகப்பெருமானைத் துதித்து நின்றனர். முருகனின் அருளால், அவர்களுக்கு கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பவுர்ணமியில், சுவாதி நட்சத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆறுமுகம் என பெயர் வைத்தனர்.

இளம் வயதில் நன்றாக கல்வி கற்ற ஆறுமுகம், அதன் பயனாக சீவநல்லூரில் கிராம அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார். அவரது நிர்வாகப் பணியால், சீவநல்லூருக்கு பல நன்மைகளைச் செய்தார். இவருக்கு புளியரையைச் சேர்ந்த ஆரியவடிவு என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தனர்.

இல்லறத்தினையும், அரசுப் பணியையும் இருகண்களாக தொடர்ந்தார். இந்த தம்பதியருக்கு பொன்னம்மாள், உலகம்மாள் என இரு குழந்தைகளும் பிறந்தன. இந்த நேரத்தில்தான் நாம் இந்த உலகில் பிறந்தது, குழந்தைகளை வளர்ப்பதற்கும், வரி வசூலிக்கவும் மட்டுமா? என ஆறுமுகம் மனதில் கேள்வி பிறந்தது.

கயிலாசம் என்பவர் ஆறுமுகத்திடம் தண்டல்காரராகப் பணியாற்றியவர். இட்ட வேலையை முகம் கோணாது செய்யும் சிவ பக்தர். ஒரு நாள் மாலை நேரம். இருவரும் சீவநல்லூரில் இருந்து செங்கோட்டைக்கு கிளம்பினர். சற்று தொலைவு வந்ததும், ‘ஐயா! வயிறு சரியில்லை. அதோ அந்தத் தோப்புக்குள் சென்று விட்டு வந்துவிடுகிறேன்’ என கிளம்பினார் கயிலாசம்.

நீண்ட நேரம் அவரை எதிர்பார்த்திருந்தார் ஆறுமுகம். ஆனால் அவர் வரவில்லை. எனவே தோப்புக்குள் சென்றார். அங்கே ஒரு பள்ளத்தில் கயிலாசம் பத்மாசனம் இட்டு, அந்தரத்தில் மிதந்தபடி தவமேற்றிக் கொண்டிருந்தார். முதலில் அதிர்ந்த ஆறுமுகம், அதன் பின் அவர் அருகில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். இறுதியில் தவத்தில் இருந்து எழுந்த கயிலாசத்தை வணங்கி நின்றார்.

அதிர்ந்தே போய்விட்டார் கயிலாசம். ‘சுவாமி! என்னை வணங்காதீர்கள்’ என்றார்.

ஆனால் ஆறுமுகம், ‘சுவாமி! எனக்கு தாங்கள் உபதேசிக்க வேண்டும்’ என்று வேண்டினார். அவரது தீர்க்கமாக வேண்டுதலை மறுக்க முடியாத கயிலாசம், ஆறுமுகத்தின் காதில் ரகசியமாக சிலவற்றை ஓதினார்.

அன்று முதல் ஆறுமுகத்தின் வாழ்க்கை முறையே மாறிப் போய் விட்டது. அப்போது அவருக்கு வயது 35. பந்தம் பாசம் அனைத்தையும் தூக்கி எறிந்தார். கால் போன போக்கில் நடந்தார். குற்றால மலைக்கு சென்றார். மலை மீது நடந்து செண்பகாதேவி அருவிக்கு சென்றார். அனைத்தையும் துறந்த துறவிகள் கூடும் இடமான குகையில் ஆறுமுகமும் தங்கினார்.

அன்று சித்ரா பவுர்ணமி. அன்னையின் அருளைப் பெற தவத்தில் ஈடுபட்டனர், அங்கிருந்த துறவிகள். இதனால் குகைக்கு உள்ளே செல்ல ஆறுமுக சுவாமிக்கு இடமில்லை. எனவே குகை வாயிலில் அமர்ந்து தவம் புரிந்தார். நள்ளிரவு.. சலசலத்து ஓடும் அருவி நீர் சப்தம்.. அருவி தூறல் ஆறுமுக சுவாமியின் மீது விழுந்தது. அதை உணரும் நிலையில் அவர் இல்லை. அப்போது ஒரு புலி அவர் மீது பாய்ந்தது. அப்படியே தன் வாயில் கவ்வி இழுத்துச் சென்றது.

ஆறுமுக சுவாமி தன்னுணர்வு வந்து எழுந்த போது, அவர் பரதேசி புடை என்னும் குகையில் இருந்தார். ‘என்ன நடந்தது?’ என்று ஆறுமுக சுவாமி உணரும் முன்பாக, அங்கே அன்னை அவருக்கு திருக்காட்சி கொடுத்தாள். அடுத்த கணமே அவருள் ஞானத்தின் பேரொளி எழுந்தது.

அதன் பின் ஆறுமுக சுவாமி, வீட்டுக்கு திரும்பினார். அவரது செயல், நடவடிக்கை எல்லாமே வீட்டில் இருந்தவர்களுக்கு புதிராகவே இருந்தது.

சகோதரர்கள் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று அறை ஒன்றில் கால் விலங்கிட்டு அடைத்தனர். சித்த புருஷரான ஆறுமுக சுவாமிகளின் மனம் நோக ஆரம்பித்தது. தவ வலிமையால் கால் விலங்குகளை அறுத்தெறிய செய்தார். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்தனர்.

இவர் நமது குடும்பத்துக்காக வாழ்பவர் அல்ல. இந்த உலகம் வளம்பெறுவதற்காக பிறந்த மகான் என்பதை குடும்பத்தார் உணர்ந்தனர்.

ஆறுமுக சுவாமிகளின் மகத்துவம் எங்கும் பரவியது. பல்வேறு ஊர்களில் இருந்தும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் ஓடிவந்தனர். கடைவீதியில் நடந்துவரும் போது, வியாபாரிகள் கடையை விட்டு கீழே இறங்கி கைகட்டி நிற்பார்கள். சுவாமிகள் ஏதாவது ஒரு கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து யாருக்காவது கொடுப்பார். அன்று அந்தக் கடையில் வியாபாரம் அமோகம்தான்!. எனவே ‘சுவாமிகள் இன்று நமது கடைக்கு வர மாட்டாரா?’ என வியாபாரிகள் காத்துக் கிடந்தனர்.

பெரும்பாலும் யாரிடமும் சுவாமிகள் பேசுவதில்லை. பேசினாலும் மழலைச் சொல்லில் தான் பேசுவார். கந்தல் துணிதான் கட்டியிருப்பார். எப்போதும் பாம்புகளுடன்தான் விளையாடுவார். ‘டேய் சங்கரா’ என்று அழைப்பார். எங்கிருந்தெல்லாமோ பாம்புகள் வந்து, அவர் மேனியில் ஊர்ந்து விளையாடும். யாரேனும் வந்தால், ‘டேய் பாவிகள் வந்தாச்சு, கிளம்புங்க!’ என்பாராம். அவை மறைந்துவிடும்.

ஆறுமுக சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் போதெல்லாம், பல நாட்கள் அங்கேயே தங்கி விடுவார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையின் அடிவார ஊருக்கு சுவாமிகள் சென்றுள்ளார். அங்குள்ள மக்கள் சுவாமிகளை வணங்கி நின்றனர். ‘சுவாமி மூன்று வருடங்களாக மழை பொய்த்து விட்டது. நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்' என வேண்டி நின்றனர். சிறிது நேரம் யோசித்த சுவாமிகள் அங்குள்ள சுனைக்குச் சென்றார். அங்கிருந்த சேற்றை எடுத்து உடல் முழுதும் பூசிக்கொண்டார். பாறையில் அமர்ந்து தியானம் செய்தார். சுட்டெரித்தது வெயில். பாறையும் தகதகவென கொதித்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த மேகக் கூட்டம், சுவாமிகளின் உடலில் பூசிய சேறு கரைந்து ஓடும் வரை மழையாய் கொட்டித் தீர்த்தது. பொதுமக்கள் மகிழ்ந்து சுவாமியை கொண்டாடினர்.

மதுரையில் செல்வந்தர் ஒருவரின் மகனுக்கு திருமணம். அன்றிரவு அவன் பாம்பு தீண்டி இறந்தான். மிகுந்த துக்கத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று உடலை சிதையில் வைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த சுவாமிகளிடம், அன்பர் ஒருவர் இந்த விஷயத்தை கூறினார். மறுநிமிடம் சுவாமிகள், சடலத்தின் மீது எச்சிலை உமிழ்ந்து, ‘சீ போ.. எழுந்திரு’ என்று சொல்லி விட்டுச் சென்றார். சிதையில் இருந்து அவரது மகன் எழுந்தான். அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர். சுவாமியை தேடினர். ஆனால் அவரை எங்கும் காணமுடியவில்லை. அதன்பிறகு செங்கோட்டைக்கு வந்து சுவாமிகளை வணங்கி, மூட்டை நிறைய நாணயங்களை சமர்ப்பித்தார் மதுரை செல்வந்தர்.

சுவாமிகளோ, ‘நீ ஆட்கொல்லியுடன் அல்லவா வந்திருக்கிறாய். நில்லாதே போ’ என்றார்.

இதனால் செல்வந்தருக்கு வருத்தம் உண்டானது. தன்னுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். உடனே சுவாமிகள், ‘சரி.. நீயே இந்த நாணயங்களை தெருக்களில் எறிந்துவிட்டுப் போ’ என்றார். செல்வந்தரும் மறு பேச்சின்றி அப்படியே செய்தாராம். தெருக்களில் எறிந்த காசுகள் ஏழை மக்களுக்கு போய் சேர்ந்தது.

சுவாமிகள் நூறு வயதை எட்டியதும் (கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பவுர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலையை அடைந்தார்.

அவருடைய சமாதி தங்கள் இடத்தில் அமைய வேண்டும் என்று பலரும் போட்டியிட்டனர். இறுதியில் திருவுளச்சீட்டு போட்டு பார்த்தனர். குண்டாற்றங்கரைத் தோப்பு என்று முடிவானது. அதன் படி சுவாமிகளின் சமாதி அமைக்கப்பட்டு, சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. தற்போது இந்த கோவில் பச்சைபசேல் என வயற்காட்டுக்கு நடுவே, குண்டாற்றங்கரையில் உள்ளது. சுவாமிகள் சமாதியாகி 134 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இவரை நாடி வரும் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.

தற்போதும் பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து வேண்டிய வரத்தினை பெற்று செல்கிறார்கள். குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டி இங்கு வந்து அன்னதானத்தில் கலந்துகொள்கிறார்கள். நாள் பட்ட நோய்கள் தீரவும் சுவாமி அருளுகிறார். நாகதோஷம் இருப்பவர்களும், இந்த ஒடுக்கத்தில் ஆறுமுக சுவாமியை வணங்கி நலம் பெறுகிறார்கள்.

மூதாட்டிக்கு அருளிய சித்தர் :

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டி ஒருவர், சுவாமிகளை வணங்கி தன் வறுமை குறித்து கூறினார். உடனே அவர் ‘நீ கடைக்குச் சென்று பொருள் வாங்கு. பொருட்களுக்குத் தேவையான பணம் உன் வீட்டில் இருக்கும்’ என்றார்.

அதன்படியே வாங்கிய பொருளுக்கு வீட்டில் நாலணா இருந்தது. தொடர்ந்து மூதாட்டி வாழ்க்கை சராசரியாக போய்க் கொண்டிருந்தது. ஆசை யாரை விட்டது. மூதாட்டி சுவாமிகளிடம் சென்று, ‘சுவாமி இப்படி தினந்தோறும் நாலணா தருவதற்கு பதில், ஒரு மாதத்துக்குத் தேவையானதை மொத்தமாக அருளுங்களேன’ என்றாள்.

மவுனமாக எழுந்து சென்ற சுவாமிகள், சிறிது மண்ணை அள்ளினார். அது தங்கமாக மாறி மின்னியது. அதை எடுத்து வந்து மூதாட்டியிடம் காட்டினார் ‘பார்த்தாயா! அவ்வளவும் தங்கம். இது போதுமா?’ என்றார்.

மூதாட்டி பேசாமல் நின்றாள். பிறகு சுவாமிகள், ‘இது ஆட்கொல்லி. இதை நீ வைத்திருந்தால் உன் உறவினர்களே உன்னைக் கொன்றுவிடுவார்கள். பேசாமல் கிடைப்பதை வைத்து நிம்மதியாக வாழு’ என கூறினார். அவர் அறிவுரையில் எவ்வளவு அர்த்தம் உள்ளது என்பதை மூதாட்டி மட்டுமல்ல, அங்கு இருந்த அனைவரும் உணர்ந்தனர்.

பிடிசோற்றால் குழந்தைப் பேறு :

ஆறுமுக சுவாமியிடம் குழந்தைப் பேறு கேட்டு வருபவர்கள் பலர். சுவாமி தான் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு பிடியை அவர்களுக்குக் கொடுப்பார். அதை சாப்பிட்டவர்கள் குழந்தைப் பேறு பெற்றனர். ஒரு பெண் மட்டும் அறுவறுப்பு காரணமாக, பிடிசோற்றை எடுத்துக்கொண்டு போய் கழுநீர்ப் பானையில் போட்டார். இவருக்கு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. எனவே மீண்டும் சுவாமியிடம் வந்து குழந்தைப் பேறு வேண்டி நின்றார்.

அப்போது சுவாமிகள், ‘அதற்கு ஏன் இங்கு வந்தாய்? உன் வீட்டு கழுநீர் பானையிடம் கேள்’ என்றாராம். அந்த பெண் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, மீண்டும் பிடி சோற்றை வாங்கி குழந்தைப் பேறு பெற்றார்.

இரண்டு மணி நேரம் விழுந்த நீர் :

சேத்தூர் ஜமீனைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்ய விரும்பினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார் ஆறுமுக சுவாமி. ஜமீன்தார் உடனிருக்க அபிஷேகம் தொடங்கியது. 107 குடம் நீரால் அபிஷேகம் செய்து, 108-வது குடத்து நீரை அபிஷேகம் செய்யத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் அந்தக் குடத்தில் இருந்து தண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. குடத்தைக் கையில் பிடித்தவர்களுக்கு கை வலி ஏற்பட்டு சுவாமிகளிடம் கெஞ்சினர். சுவாமிகள் ‘தண்ணீர் போதும்’ என்றவுடன் குடத்தில் இருந்து வரும் நீர் நின்றது.

அமைவிடம் :

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் செங்கோட்டை நுழைவு வாயில் இடது புறம் உள்ள குறுகிய ரோட்டில் சென்றால், இந்த ஆலயத்தை தரிசிக்கலாம். செங்கோட்டைக்கு கேரளா மற்றும் தமிழகத்தில் பல பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு. தென்காசி- புனலூர் ரெயில்பாதையில் செங்கோட்டை ரெயில் நிலையம் உள்ளது. அங்கிருந்தும் ஆட்டோவில் கோவிலை அடையலாம்.  

லட்சுமியை விரதம் இருந்து அழையுங்கள்

லட்சுமியை விரதம் இருந்து அழையுங்கள்
mahalakshmi-worship



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753


மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் நாம் எந்த அளவுக்கு விரதம் இருந்து மனப்பூர்வமாக வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும்.

இன்றைய உலகில் பணம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்று கூட சொல்வார்கள். பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலைதான் இன்று உள்ளது. இந்த பணத்தை சம்பாதிக்க உடல் உழைப்பு, அறிவு உழைப்பு மட்டும் இருந்தால் போதாது. கடவுளின் அனுகிரகமும் வேண்டும். செல்வத்தையும், பணத்தையும் வாரி வழங்கும் இறை அம்சமாக லட்சுமிதேவி கருதப்படுகிறாள்.

மகாலட்சுமியை நாம் எந்த அளவுக்கு மனப்பூர்வமாக வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும். லட்சுமியின் அம்சமாக பல்வேறு லட்சுமியின் அவதாரங்கள் உள்ளன. அதில் மிகுந்த முக்கியத்துவமும், தனித்துவமும் கொண்டது வரலட்சுமி ஆகும். நாம் வேண்டும் வரங்களை எல்லாம் மறுக்காமல் தருவது வரலட்சுமிதான்.

வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களாக இருந்தால் கணவர் நலமாக இருக்க வேண்டும், நீடுழி வாழ வேண்டும், அதற்கு வரலட்சுமி அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். கன்னி பெண்களாக இருந்தால் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

வரலட்சுமியை வீட்டுக்குள் வரவழைத்த பிறகு உரிய முறையில் ஐதீகம் தவறாமல் பூஜைகளை செய்ய வேண்டும். இந்த பூஜை முறைகள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டதாக இருக்கும். கலச பூஜை, பாடல்கள், நைவேத்தியம், தானம் உள்பட அனைத்து முறைகளிலும் வித விதமான சம்பிரதாயங்கள் உள்ளன. எனவே உங்கள் குடும்ப முறைக்கு எந்த பூஜை முறையை கடைபிடிக்கிறார்களோ அதை தெரிந்து கொண்டு பூஜைகள் செய்ய வேண்டும்.

பொதுவாக வரலட்சுமி விரத பூஜை என்றதுமே கலச பூஜையை பிரதானமாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். கலச பூஜையை எல்லோரும் நினைத்தவுடன் செய்து விடக்கூடாது. அதற்கு என்று ஐதீகங்கள் உள்ளன. எனவே கலச பூஜை செய்து பழக்கம் இல்லாத குடும்பத்தினர் லட்சுமி படத்தை வணங்கினாலே போதும்.

பாரம்பரியமாக கலச பூஜை செய்பவர்கள் தவறாமல் இந்த ஆண்டும் செய்ய வேண்டும். கலச பூஜையை மட்டும் தவற விடவே கூடாது. அதுபோல லட்சுமி ஆராதனை செய்து கையில் ரட்சை கட்டுபவர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும். ஆண்கள் ரட்சை கட்டக்கூடாது. பெண்கள் மட்டுமே வலது கையில் ரட்சை கயிறை கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் கழித்து அதை அவிழ்த்து விடலாம்.

கலச பூஜை செய்து பழக்கம் இல்லாதவர்கள் பூஜை அறையில் லட்சுமி படத்தை வைத்து தாமரை பூ, தாழம்பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். குத்துவிளக்கை நன்றாக சுத்தம் செய்து அதில் பூ சுற்றி அதையே லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நீங்கள் கலசத்தை லட்சுமியாக நினைத்தாலும் சரி, குத்து விளக்கை லட்சுமியாக நினைத்தாலும் சரி தீபதூப ஆராதனைகளை சரியாக செய்ய வேண்டும். லட்சுமி அஷ்டோத்தரம் பாட வேண்டும். இல்லையெனில் தெரிந்த லட்சுமி பாடல்களையாவது பாட வேண்டும்.

பூஜை முடிந்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, தட்சணை வைத்து கொடுக்க வேண்டும். உங்கள் சக்திக்கேற்ப எத்தனை சுமங்கலி பெண்களுக்கு வேண்டுமானாலும் செய்யலாம். குறைந்தபட்சம் 2 சுமங்கலி பெண்களுக்காவது தானம் செய்ய வேண்டும்.

சிலர் தங்கள் வீட்டுக்கு சுமங்கலி பெண்களை அழைக்க இயலாத சூழ்நிலையில் இருந்தால் ஆலயங்களுக்கு எடுத்து சென்று தானங்களை செய்யலாம். மொத்தத்தில் லட்சுமி மனம் குளிர வேண்டும். அதற்கு என்ன வேண்டுமோ அதை செய்ய வேண்டும். லட்சுமிக்கு தாமரை பூ மிகவும் பிடிக்கும். எனவே அதை தவறாமல் படையுங்கள். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைக்கலாம்.

வருகிற வெள்ளிக்கிழமை காலை-மாலை இருவேளையும் லட்சுமி பூஜை செய்யப்பட வேண்டும். காலை பூஜையை அதிகாலையிலே முடித்து விட வேண்டும். மாலை நேரத்து பூஜையை 6 மணி அளவில் வைத்துக் கொள்ளலாம். மாலையில் பால் நைவேத்தியம் செய்வது நல்லது. இரு பூஜைகளிலும் லட்சுமி பாடல்களை பாட வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் தொங்க வேண்டும். இதில் கவனமாக இருங்கள். இப்படி வரலட்சுமி விரத பூஜைக்கு நிறைய ஐதீகங்கள் உள்ளன. 

பாற்கடலை கடைந்தபோது வெளிவந்தவை

பாற்கடலை கடைந்தபோது வெளிவந்தவை
parkadal-story



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753


அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் இணைந்து, மந்தார மலையை மத்தாக்கி கடையக் கடைய அபூர்வ சக்திகள் கொண்ட பல பொருள்கள் வெளிவந்தன.

அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் இணைந்து, மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர். தேவர்களும், அசுரர்களும் இரு பக்கமும் பிடித்து இழுத்ததில் மலையில் உடல் அழுந்தி ஏற்பட்ட வலியால், வாசுகி பெரும் மூச்சு விட்டது. அது விஷமாக மாறி கடலில் கலந்து ஆலகால விஷமாக வெளிப்பட்டது. ‘அனைத்து பிரபஞ்சங்களையும் அழிக்கும் வல்லமை கொண்ட அந்த விஷத்தை அழிப்பது எப்படி?’ என தெரியாமல் அனைவரும் அஞ்சி ஓடினர்.

உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான், அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அந்த விஷம் ஈசனை எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக, அவரது தொண்டை பகுதியை அழுத்திப் பிடித்து, உடலுக்கும் விஷம் இறங்காமல் தடுத்தாள் பார்வதி தேவி. விஷமானது ஈசனின் தொண்டையிலேயே நின்று விட்டது. இதனால் அவரது கழுத்துப்பகுதி நீலநிறமாக மாறியது. இதன் காரணமாகவே அவர் ‘நீலகண்டன்’ என்ற பெயரைப் பெற்றார்.

முதலாவதாக வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் எடுத்து அருந்திய பின், பயம் தெளிந்த தேவர்களும், அசுரர்களும் மீண்டும் மலையை கடைய முற்பட்டனர். மலையை கடையக் கடைய அபூர்வ சக்திகள் கொண்ட பல பொருள்கள் வெளிவந்தன.

திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்தவைகள்:

* ஆலகால விஷம்

* காமதேனு

* உச்சை சிரவஸ் என்னும் வெள்ளைக்குதிரை

* ஐராவதம் என்னும் வெள்ளை யானை

* கற்பக விருட்சம்

* அப்சரஸ்திரிகள்

* அகலிகை என்ற அழகான பதுமை

* திருமகள் என்னும் லட்சுமி

* அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி

பெண்களின் கர்ப்பகால மலச்சிக்கலும் - உணவுமுறையும்

பெண்களின் கர்ப்பகால மலச்சிக்கலும் - உணவுமுறையும்
Pregnancy-constipation-foods



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் தீர என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.

நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை. 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.

கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.

தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.

சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்சனைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

எண்ணெய் பசை சருமத்தினரை பொலிவாக்கும் இயற்கை வழிகள்

எண்ணெய் பசை சருமத்தினரை பொலிவாக்கும் இயற்கை வழிகள்
oil-skin-problems-natural-solution



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை பார்க்கலாம்.

சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை பார்க்கலாம்.

* 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய வேண்டும்.

* 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி சருமத்தை பொலிவாக்கும்.

* ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக அகலும்.

– இந்த இயற்கை வழிமுறைகளை தவறாமல் தினமும் செய்து வந்தால் உங்கள் சருமத்தினை பொலிவாக்கலாம்.

பிறந்த குழந்தையை தூக்குவது எப்படி?

பிறந்த குழந்தையை தூக்குவது எப்படி?
How-To-Hold-Newborn-Baby



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753


பிறந்த குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து உரம் விழலாம். பிறந்த குழந்தையை சரியாக தூக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது.

பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம். உரம் விழலாம். இதற்குச் சுய மருத்துவம் செய்யக் கூடாது. குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும்.

திரும்பவும் இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்குங்கள். பஞ்சு போல் மென்மையாகக் கையாளுவதன்மூலம் பிஞ்சு உடலுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கும்.

பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.

பரங்கிக்காய் - சுக்கு சூப் - உடல் எடையை குறைக்கும்

 பரங்கிக்காய் - சுக்கு சூப் - உடல் எடையை குறைக்கும்
pumpkin-dry-ginger-soup



                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753


காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.

தேவையான பொருட்கள் :

சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பரங்கிக்காய் - சிறிய துண்டு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.