மது பழக்கத்தை மறக்கச் செய்த மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர்

மது பழக்கத்தை மறக்கச் செய்த மாறந்தை  ஸ்ரீசெட்டி சித்தர்
siddhar-worship

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தென்காசி அருகே உள்ள மாறந்தையில் தங்கியிருந்து பல அற்புதங்களைச் செய்து வந்த, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தரைப் பற்றி பார்த்து வருகிறோம்.

ஸ்ரீசெட்டி சித்தரின் ஜீவ சமாதி ஆலயம்
தென்காசி அருகே உள்ள மாறந்தையில் தங்கியிருந்து பல அற்புதங்களைச் செய்து வந்த, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தரைப் பற்றி பார்த்து வருகிறோம். அவருக்கு கழுத்தில் ஏற்பட்ட நோயைப் பற்றியும், அந்த நோய் தீர பலரும் அவரை மருத்துவரிடம் அழைத்தும் வராது பற்றியும் பார்த்தோம். எதற்காக அவர் மருத்துவரிடம் செல்லவில்லை... அறிந்து கொள்வோம் வாருங்கள்...

மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தருக்கு ஏற்பட்ட நோய் தீர, அவரை சீடர்கள் பலரும் மருத்துவரிடம் செல்ல அழைத்தனர். அதற்கு சித்தர் சிரித்தபடியே, ‘பிறவி கடன் இது. நான் அனுபவித்தே தீரவேண்டும். அதுவும் இந்த ஜென்மத்திலேயே இந்த வலியை தாங்கியாக வேண்டும்' என நோயின் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டார். இறுதியில் அவரது தவ வலிமையின் மூலமாகவே, அவரது கண்ட மாலை நோய் குணமானது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ளது முறப்பநாடு. இங்கு குமாரசுவாமி பிள்ளை என்ற புலவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஸ்ரீசெட்டி சித்தரின் பாட்டுத் திறனில் அலாதிப் பிரியம். சித்தரின் பாடும் திறன் பற்றி, ஒரு முறை முறப்பநாட்டில் உள்ள திருவாவடுதுறை கிளை மடத்து தம்பிரான் சுவாமியிடம் புலவர் கூறினார். தம்பிரானும் ஆவலுடன், ஸ்ரீசெட்டி சித்தரைச் சந்தித்து பேசினார்.

திருமுருககிருபானந்த வாரியார் திருநெல்வேலி வந்தால், ஸ்ரீசெட்டி சித்தரை சந்திக்காமல் செல்ல மாட்டார். மேலும் தான் பேசும் அனைத்து கூட்டங்களிலும் சித்தரைப் பற்றி புகழ்ந்து கூறுவார். காலங்கள் செல்லச் செல்ல சுவாமிகளின் புகழ் உலகெங்கும் பரவியது. அதே நேரத்தில் பக்தர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், சித்தர் தன்னுடைய உடலை விட்டு இறைவனடி சேர நாள் குறித்து வைத்திருந்தார்.

மாறந்தையில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து வர, தன்னோடு இருந்த சீடர்களிடம் கூறினார். ஸ்ரீசெட்டி சித்தர் அழைத்ததால், மாறந்தையைச் சேர்ந்த பலரும் தங்களது வேலைகளை அப்படியே போட்டு விட்டு ஓடோடி வந்தனர். சித்தர் அவர்களை நோக்கி, ‘இன்றோடு என் சரீரம் முடியப் போகிறது. எனவே தான் உங்களை அழைத்தேன்' எனக் கூறி அனைவருக்கும் விபூதி வழங்கினார். அனைவரும் கதறி அழுதனர்.

‘பொழுது சாயும் வேளை வரை பொறுங்கள்' என கூறிய சித்தர், அப்படியே படுத்துவிட்டார்.

சித்தரின் தலைப்பாகம் மட்டும் சிறிது சாய்ந்த வண்ணம், சரீரம் பத்மாசனத்தில் இருந்த நிலையில் உயிர் உடம்பை விட்டுப் பிரிந்து இருந்தது. அவரது ஜீவன் சிவனுடன் ஐக்கியமாகி விட்டது. வைத்தியர்கள் சித்தரின் கை நாடியை பிடித்துப் பார்த்தபோது எல்லாம் முடிந்து விட்டது. சித்தரின் திருமேனியை நாற்காலியில் வைத்து, சிவநாமத்தைச் சொல்லிக் கொண்டே புதூர் மடத்தை விட்டு ஊர்வலமாக கிளம்பினர்.

மாறந்தை ஊரின் மேற்கோடியில் உள்ள காளி கோவிலுக்கு அருகில் இருக்கும் நந்தவனத்தில் சித்தரை வைத்தனர். இரவோடு இரவாக சுவாமிகளின் திருமேனியைச் சமாதியில் எழுந்தருளச் செய்தனர். ஸ்ரீசெட்டி சித்தர் சமாதி, 1918-ம் வருடம் அக்டோபர் மாதம் 5-ந் தேதி ஹஸ்த நட்சத்திரத்தில் நடந்தது. சித்தர் ஜீவ சமாதி அடைந்த பின்னர், மண்டல பூஜையும் நடத்தி சிவலிங்க பிரதிஷ்டை செய்தனர். சமாதி இடத்தில் கற்கோவில் கட்டினர். நந்தவனத்தில் புதிய கிணறு வெட்டப்பட்டது.

ஸ்ரீசெட்டி சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட பல அற்புதங்களை நிகழ்த்தினார். அது தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தூத்துக்குடியில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் குழு ஒன்று, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் சமாதிக்கு வந்தது. அங்கு அவர்கள் தியானம் செய்து விட்டு அருகில் இருந்த பக்தர்களிடம் ‘ஸ்ரீசெட்டி சித்தர், இதுவரை உங்களுக்கு காட்சி அளித்திருக்க மாட்டார். இனி உங்களுக்கு சர்ப்பமாக காட்சியளிப்பார்' என்று கூறிச் சென்றனர். அதே போல் மூன்று நாள் மூலஸ்தானத்தில் சர்ப்பம் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

ஸ்ரீசெட்டி சித்தர் சன்னிதி


தனக்கு குருபூஜை எப்படி நடக்க வேண்டும் என்பதை ஸ்ரீசெட்டி சித்தரே ஒவ்வொரு ஆண்டும் தீர்மானிப்பார். குரு பூஜைக்கு முன்பாக பக்தர்கள் கனவில் தோன்றி, திரைப்படம் போல தனது ஆலயத்தில் நடைபெற உள்ள பூஜையை காட்டியருள்வார். அதன்படியே கமிட்டியுடன் பக்தர்கள் கலந்து பேசி, குரு பூஜையை செய்து முடிப்பார்கள். சித்தர் சமாதியை வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் பிரச்சினைகள் நீங்கும். பேய், காத்து கருப்பு போன்றவைகள் அகலும். கெட்ட கனவுகள் வருவது நின்று போகும்.

ஒரு முறை ஆலங்குளத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், மது போதையில் சித்தரின் ஜீவ சமாதி இடத்தில் படுத்திருந்தார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘மது அருந்தாதே. உனக்கு மதுவின் நினைப்பு வரும்போதெல்லாம், உன்னுடைய குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிரு’ என்றார். சித்தர் சொன்னபடியே நடந்ததால், அந்த பக்தர் மது போதையில் இருந்து மீண்டார்.

கொல்லிமலை சித்தர் என்ற பெயரில் போலி சாமியார் ஒருவர் கோவிலுக்கு வந்தார். அனைவரும் அவர் தோற்றத்தைக் கண்டு கோவிலில் தங்க அனுமதித்தனர். ஆனால் பக்தர்கள் கனவில் சுவாமி தோன்றி, ‘அவன் போலி. அவனை தங்க வைக்காதீர்கள்' என கூறினார். மறுநாள் பக்தர்கள் அவரை கவனித்த போது அவரின் போலித்தனம் தெரிந்தது. அவர் மக்களை ஏமாற்றி பணம் பறித்தார். குடிப்பழக்கம் கொண்டவர் எனவும் தெரியவந்தது. மக்கள் அவரை திரும்பி அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ செட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்த இடமானது, புதன் கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டது என்று சொல்லப்படுகிறது. எனவே இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், கல்வி கேள்விகளில் சிறப்புடன் விளங்குவர். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஞான தேடல் உள்ளவர்களுக்கு ஞானத்தை அளிக்கும், ஞானதபோவனமாக விளங்குகிறது, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் ஆலயம். எவ்வித தோஷம், பிரச்சினைகள் இருந்தாலும் சித்தரின் சன்னிதியை அடைந்தால் நிச்சயம் சரியாகி விடும். பக்தர்களின் தேவைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தக்க இடத்திற்கு அனுப்பியோ சுவாமிகள் சரிசெய்கிறார். ஜாதி மத பேதம் பார்க்காதவர், எவ்வுயிருக்கும் தீங்கு செய்ய நினையாதவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் சித்தருக்கு மிகவும் பிடித்த அடியார்கள் ஆவர். அவர்களை சித்தர் ஒரு குழந்தையை போல பாதுகாக்கிறார்.

சுடர் விட்டு எரிந்த விளக்கு

ஸ்ரீசெட்டி சித்தர் காலமான பிறகு சுமார் 21 ஆண்டுகள், சரியான பராமரிப்பு இன்றி அவரது ஜீவ சமாதி புதர் மண்டிக் கிடந்தது. வருடந்தோறும் குருபூஜையை மட்டும் விடாமல் மக்கள் செய்து வந்தனர். அதன்பின் பல அற்புதங்கள் நிகழ்ந்த காரணத்தினால் கோவில் தினசரி பூஜைக்கு வந்தது.

ஆரம்ப கால கட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த இரு நண்பர்கள் கோவிலைத் திறந்து பூஜை செய்ய ஆர்வம் காட்டினர். அவர்கள் இலுப்பெண்ணையில் தீபம் ஏற்றுவார்கள். காலையில் ஏற்றினால் மாலையில் அணைந்து விடும். அதற்குள் எண்ணெய் ஊற்ற வேண்டும். எனவே தினமும் காலை மாலை பூஜை செய்து எண்ணெய் ஊற்றி வந்தனர்.

இந்நிலையில் இருவரும் சதுரகிரி மலைக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கி விட்டனர். அங்கு அவர்கள் இருக்கும் போதெல்லாம் ஊர் நினைப்புதான். ‘எப்படி விளக்கு எரிகிறதோ, அணையாமல் எரிய வேண்டுமே’ என மனதுக்குள் வேண்டி நின்றனர். ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது, விளக்கு அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. ஆச்சரியப்பட்டவர்கள், ஸ்ரீசெட்டி சுவாமியின் அருளை எண்ணி வியந்து நின்றனர். இதை கேள்விபட்ட பலரும் சித்தரை தரிசிக்க கோவிலுக்கு வர ஆரம்பித்தனர்.