K.Karthik Raja - Share Market Chart Training- Accumulation and Distribution Indicator

K.Karthik Raja  - Share Market Chart Training- Accumulation and Distribution Indicator

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                         Click Here : Register for Free Training


K.Karthik Raja  - Share Market Chart Training- Accumulation and Distribution Indicator

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

Accumulation Distribution Indicator - Share Market Training

Accumulation Distribution tracks the relationship between price and volume and acts as a leading indicator of price movements. It provides a measure of the commitment of bulls and bears to the market and is used to detect divergences between volume and price action - signs that a trend is weakening.

Accumulation Distribution is an enhancement of the On Balance Volume indicator. It first compares opening and closing prices to the trading range for the period, the result is then used to weight the volume traded.

The strongest signals on the Accumulation Distribution are divergences:

Go long when there is a bullish divergence.
Go short when there is a bearish divergence.
Stop-losses should be placed below the most recent low (when going long) and above the latest high (when going short).

தேங்காய் சேர்த்த இறால் குழம்பு

தேங்காய் சேர்த்த இறால் குழம்பு
prawn-kuzhambu-added Cocunut


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
கறிவேப்பிலை - மூன்று கொத்து
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் -  தேவையான அளவு
சீரகம் - கால் டீ ஸ்பூன்

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.

சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.

இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.



சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.

ஃபிங்கர் சிக்கன்(finger-chicken)

ஃபிங்கர் சிக்கன்(finger-chicken)


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ஃபிங்கர் சிக்கனை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே ஃபிங்கர் சிக்கனை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2 கிலோ
முட்டை - 1
தயிர்  - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மைதா - 1 கப்
பிரட் தூள் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கேசரி கலர் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

பின் அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.

சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

வடிகட்டிய சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.

இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன்  ரெடி!!!

இந்த ஃபிங்கர் சிக்கனை சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

பாமாயில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மை - தீமைகள்

பாமாயில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மை - தீமைகள்
palm-oil-good-or-bad


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பாமாயில் எண்ணெயை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது கெட்டது என்றும் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று தான் பாமாயில். ஆனால், அதில் ஆரோக்கியமற்ற பிரச்சனைகளும் இருக்கின்றது. சில ஆராய்ச்சிகள் இதனை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது கெட்டது என்றும் கூறுகின்றன.

குறிப்பிட்ட அளவில் பாமாயிலை உபயோகிப்பது பெரிய பிரச்சனையை உருவாக்கப்போவதில்லை. ஆனால், யாரெல்லாம் இதனை உபயோகிக்கலாம், யாரெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது.

பாமாயிலில் அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். உங்களுக்கு இதய நோய் இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் இருந்திருந்தாலோ பாமாயில் உபயோகிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உடல் எடை குறைப்பதற்கு முயற்சிப்பவரா நீங்கள். பாமாயிலின் அதிகப்படியான கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கக்கூடும். ஆனால், தினமும் பாமாயிலை உட்கொள்ளும் போது அது உடலில் உள்ள கொழுப்பு செல்களை படிபடியாக நீக்கும்.

பாமாயிலில் உள்ள அதிகமான கொழுப்பு வளர்சிதை நோய்களை உண்டு பண்ணும். பாமாயிலில் உள்ள பால்மிடிக் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடும். எனவே, இது வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து, வளர்சிதை நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும்.

பாமாயிலை சமைக்கும் போது அது ஆரோக்கிய பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஆய்வு முடிவுகள் கூட, சமைத்த பாமாயில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறது. ஆனால், சமைக்காத பாமாயில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.


பரம்பரை வியாதிகளான அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் இதய நோய்கள் போன்றவை இருந்தால் பாமாயிலை தவிர்த்துவிடுங்கள். ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், பாமாயில் உடலில் கொழுப்புச் சத்தை அதிகரித்துவிடும் என்பது தான்.

பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் கண்களுக்கு அற்புதங்களைச் செய்யலாம். கண்பார்வை மேம்படுத்துவதில் பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ (ரெட்டினோல்) உருவாவதற்கு பீட்டா கரோட்டின் முன்னோடியாகும். வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சமநிலையற்ற பாமாயிலால் ஏற்படக்கூடிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை பயன்படுத்துவது சிறந்தது.

பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாமாயிலை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சுருக்கம் மற்ற தோல் பிரச்சனைகள் எல்லாவற்றையும் போக்கிவிடும். மேலும், இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆன்ஸிடன்டாகும்.



வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு உங்களுக்கு இருந்தால் பாமாயிலை எந்த தயக்கமும் இல்லாமல் உபயோகிக்கலாம். தினசரி உணவில் பாமாயிலை சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ கிடைத்துவிடும். அது பாமாயிலின் மிகச் சிறந்த குணங்களில் ஒன்று.

பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள்

பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள்
Reasons-for-bleeding-for-women

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 12 வயதிலேயே பூப்டைந்து விடுகின்றனர். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் பூப்படைவது குறைந்து கொண்டே வருகிறது. 12 வயதில் ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்.

அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

மத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:- கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), சினைப்பை கட்டிகள் (Granulosa Cell Tumours), கர்ப்பபை அல்லது கர்ப்ப பைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.

அதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு, களைப்புத்தன்மை, இடுப்பு வலி, வேலைத்திறன் குறைதல், நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் போன்றவையோடு இருதய பாதிப்பு ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.

பெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து எளிய மாத்திரைகளை உட்கொள்ள சிறிய தீக்குச்சி அளவே உள்ள ஒருவிதமான ஹார்மோன்காயிலை கர்ப்பப்பையின் உட்புறச்சுவரில் பொருத்திவிட்டால், மிகுதியான இரத்தப்போக்கை தடுக்கலாம். காப்பர் டி பொருத்துவது போல் இரத்த ஹார்மோன் காயிலை பொருத்துவது மிக எளிது. இதை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.

ஹிஷ்டிராஸ்கோபி முறையில் கர்ப்பப்பையின் உள்புறச் சுவற்றின் திசுக்களை சரிப்படுத்தி விட்டால் (Endometrial Ablation) இரத்தப் போக்கு பெருமளவு குறையும். மேலை நாடுகளில் பெண்கள் பரவலாக இந்த முறையை நாடுகிறார்கள். இதனால் இரத்தப்போக்கு அறவே நிற்கவும் வாய்ப்புண்டு. அதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் இழக்கு இரத்தம் நல்ல இரத்தமே. இதை லேப்பராஸ் கோப்பி முறையிலே செய்யலாம். ஆகவே பெண்களே, மாதவிடாய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறுங்கள். 

நாப்கினை ஒருநாளைக்கு எத்தனை முறை மாற்ற வேண்டும்

 நாப்கினை ஒருநாளைக்கு எத்தனை முறை மாற்ற வேண்டும்
How-many-times-should-change-sanitary-napkin


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். இதனாலேயே உடல் அடையும் மாற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வே பல பெண்களுக்கும் இருப்பதில்லை. இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஆரோக்கியத்துக்காக செய்யும் செயல்களில் எதற்காகவும் கூச்சமோ, வெட்கமோ அடையத் தேவையில்லை.

பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்) வாங்குவது நல்லது.

இரசாயனம் கலந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நாப்கின் மாற்றும்போது பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, கைகளைக் கழுவாமல், அதே கைகளால் புதிதான நாப்கினை பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்யும்போது நுண்ணுயுரிகள் எளிதாக பரவும். இது பிறப்புறுப்புகளில் அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும்.

புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப்பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது.

நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்.

ஆபத்தான தலைவலிகள் ஏவை?

ஆபத்தான தலைவலிகள் ஏவை?
Dangerous-headaches


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான தலைவலிக்கான காரணத்தை பார்க்கலாம்.

பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் அதிகரித்தல்.
சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளைய அழற்சி
இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis)
மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் குருதிப் பெருக்கு
மூளைய முண்ணாண் பாய்பொருளின் கனவளவில் ஏற்படும் குறைவு
தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி
திடீரென ஏற்படும் கண்ணின் அமுக்க அதிகரிப்பு
மூளையில் ஏற்படும் கட்டிகள், சீழ்க்கட்டிகள்

மேற்கூறிய காரணிகளால் ஏற்படுத்தப்படும் தலைவலிக்கு விஷேட சிகிச்சைகள் அவசியமாகின்றன. ஏனெனில் மேற்கூறிய காரணங்கள் பாரதூரமான விளைவுகளைத் தரவல்லன. ஏன் சில உயிராபத்தையே விளைவிக்கக்கூடியன!

புதிதாக, திடீரென்று தீவிரமான தலை வலி ஏற்பட்டால் முன் எப்போதும் எதிர்நோக்காத அல்லது உணராத, முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால், தன்னுணர்வில் மாற்றம் ஏற்பட்டால் ( Altered Consciousness) தீவிர காய்ச்சல், வாந்தி இருப்பின், ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின்காலையில் எழும் போதே தலையிடி இருப்பதுடன், இருமும் போதோ அல்லது தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின்
பார்வையில் மாற்றம் ஏற்படின் ( குனியும் போது / வளையும் போது / இருமும் போது)

உடனடி வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான நோய் அறிகுறிகள் தலைவலிக்கான அடிப்படைக் காரணி உயிராபத்தை விளைவிக்கவல்ல நோய் நிலைமைகளால் ஏற்பட்டது என்பதை எடுத்துரைக்கின்றன.

சில ஆபத்தில்லாத தலைவலி வகைகள்

ஒற்றைத் தலைவலி
வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி (Tension Headache)
கிளஸ்ரர் தலைவலி (Cluster Headache)

என்பன சில ஆபத்தில்லாத தலைவலி வகைகள் ஆகும்.

i. ஒற்றைத் தலைவலி

பொதுவாக நாற்பது வயதிற்குட்டபட்டவர்களிலே ஏற்படுகின்ற தலைவலியாகும். இது தீவிரமான தலைவலியை ஏற்படுத்தும். இடிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தும் தலைவலியாகும். இதனுடன் சேர்ந்து வயிற்றுப்பிரட்டல், வாந்தி என்பன காணப்படலாம். இவ்வகைத் தலைவலி உடையோர் வழக்கமான வேலைகளில் ஈடுபடமுடியாது அவதியுறுவர்.

மன அழுத்தம், காலநிலை மாற்றம், தூக்கம் குறைத்தல், சாக்லேட், சீஸ், மதுபானம், அதிக வெளிச்சம், அதிகரித்த ஒலி, அதிகரித்த அசைவுகள் போன்றன இவ்வகைத் தலைவலியைத் தூண்ட வல்லன. ஒற்றைத் தலைவலியால் அவதியுறுவோர் மேற்சொன்ன காரணிகளைத் தவிர்த்தல் உசிதமானது. சிலருக்கு மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.

ii. வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி

இருபக்கத் தலையிலும் உணரப்படுகின்ற மந்தமான ஒரு தலைவலியாகக் காணப்படும். சிலரில் பட்டியை இறுக்கியது போன்ற உணர்வு காணப்படும். சிலரில் கண்களுக்கு பின்னால் அழுக்குவது போன்று காணப்படும். சிலர் தலையுச்சியில் அமுக்குவது போன்று உணர்வர். இவ்வகைத் தலைவலி அதிக மன அழுத்தம், வேலைப்பளு உள்ளவர்களிலேயே பொதுவாக ஏற்படுகின்றது. இவர்களுக்கு தளர்வுப் பயிற்சிகள் பரிந்துரைக்கபடுகின்றது. சிலருக்கு வலி நிவாரணிகள் தேவைப்படலாம்.

iii. கிளஸ்ரர் தலைவலி

இருபதுக்கும், நாற்பதுக்குமிடையிலான வயதுடைய ஆண்களில் ஏற்படவவல்ல ஒரு வகைத் தலைவலியாக இது காணப்படுகின்றது. மிகத் தீவிரமான தாங்கமுடியாத தலைவலியாகக் காணப்படும். ஒரு பக்கத் தலைப்பகுதியிலேயே ஏற்படும். கண்ணின் பின்னாக உருவெடுக்கும் இத் தலைவலியுடன் கண்ணீர் சுரத்தல், மூக்கடைப்பு, கண் செந்நிறமாதல், தற்காலிகமாகக் கண்ணை இறுக்கி மூடமுடியாதிருத்தல் போன்றனவும் காணப்படலாம்.

தலைவலி நீடிக்கும் நேரம் 30 - 90 நிமிடங்களாக இருப்பினும், ஒரே நாளில் பல தடவைகள் ஏற்படலாம். நித்திரையில் கூட ஏற்படலாம். இவ் வகைத் தலைவலி பொதுவாக ஆண்டொன்றின் குறிப்பிட்ட காலத்திலேயே ஏற்படுகின்றது.

இவ்வகைத் தலைவலி உடையோருக்கு முற்காப்பு மருந்துகள் வழங்கமுடிவதில்லையாயினும், தலைவலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் மருந்துகள் மூலம் தலைவலியை நிறுத்த முடிகின்றது. இவ்வகைத் தலைவலி உடையோரில் வலிநிவாரணிகள் பயனற்றவை ஆகின்றன.வை?

செம்பருத்தி எண்ணெய் - கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு

செம்பருத்தி எண்ணெய் - கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு
Hibiscus-oil-for-hair

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு உண்டு. இன்று இந்த எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு உண்டு. இன்று இந்த எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

செம்பருத்தி பூ - 10
தேங்காய் எண்ணெய் - 250 கிராம்
வெந்தயம் - 1 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்த பின்னர் ஆற வைத்து ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

பயன்கள்

1.செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும்.
2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது.
5. நரைமுடியை போக்கும்
6. தலை அரிப்பை தடுக்கும்.



குளிக்க செல்லும் முன், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

நோய்க்கிருமிகளை விரட்டும் தக்காளி

நோய்க்கிருமிகளை விரட்டும் தக்காளி
tomato-control-Pathogen


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால் தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.

பழுத்த தக்காளி பழத்தில் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது. சிறுநீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலிய நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு சாறாக்கி அருந்தினால் நோய் குணமாகும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும். உடல் பருமன் குறையும்!

பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைப்பதுடன்100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும். கலோரி 20 என்பதால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.

உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.

தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.

தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது. இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன.

பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம்.

வாராகி வழிபாடு செய்வதற்கு உகந்த காலம்

வாராகி வழிபாடு செய்வதற்கு உகந்த காலம்
varahi-amman-worship.

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


வாராகி வழிபாட்டை எந்த நேரத்தில் முதல்நாள் தொடங்குகிறோமோ அதே நேரத்தில் தான் எப்போதும் வழிபாடுகளை செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1. பொதுவாக அம்பிகை என்றாலே மாலைநேர வழிபாடுதான் மகத்தானது. நாம் நினைக்கும் காரியங்கள் தடையின்றி நடக்க மாலை நேர வழிபாடுகளை தான் அதிகம் செய்ய வேண்டும்.

மாலை நேர வழிபாடுகளில் முதன் மையான இடம் உக்ர தெய்வங்களுக்கு உண்டு. வாராகியே அதன் நாயகியாக விளங்குகிறாள். இவளை மாலை நேரத்தில் தொழும்போது மட்டும் இவள் சக்தியும் பெருகும் நம் வலிமையும் பெருகும்.

2. வாராகி வழிபாட்டை பொருத்த மட்டில்,

காலை வழிபாட்டிற்கு :- 25 சதவீதம் நற்பலன்கள்
மாலை வழிபாட்டிற்கு :- 70 சதவீதம் நற்பலன்கள்
இரவு நேர வழிபாட்டிற்கு :- 100 சதவீதம் நற்பலன்கள்
நிச்சயம் உண்டு,

3. வாராகி வழிபாடு செய்யும் நேர அளவு 8 மணி முதல் 9 மணிக்குள் அமைய வேண்டும். இந்த நேரத்தில் அவளை அர்ச்சித்து பணியும் போது கிடைக்கும் ஆற்றல் அளவற்றது.

மேலும் வாராகி வழிபாட்டை எந்த நேரத்தில் முதல்நாள் தொடங்குகிறோமோ அதே நேரத்தில் தான் எப்போதும் வழிபாடுகளை செய்ய வேண்டும். நம் சுய வேலைக்காக நேரத்தை அடிக்கடி மாற்றினால் கேட்டபலன் கிடைப்பது கடினம். ஆக காலம் அறிந்து அவளை வழிபட்டு நற்பயன்பெறுங்கள். 

வாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்?

வாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்?
varahi-amman-worship-on-night

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


மாலை நேர வழிபாடுகளில் முதன்மையான இடம் உக்ர தெய்வங்களுக்கு உண்டு. வாராகியை மாலை நேரம் தொழும்போது மட்டும் இவள் சக்தியும் பெருகும் நம் வலிமையும் பெருகும்.

வாராகியை இரவு நேர நாயகி என குறிப்பிட்டு இருந்தேன். இதன் சூட்சமம் சொல்கிறேன். அன்னையானவள் இந்த உலகில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காத்தருளவே அவதரித்தவள். எதிரி ஏவிவிடும் தீய ஆற்றலை அழிக்கவே உருவெடுத்தவள். இந்த தீய சக்தி எனும் பேய், பிசாசு, ஏவல், பில்லி இவை அனைத்திற்கும் வலிமை கூடும் நேரம் இரவு நேரம் தான். இந்த காலகட்டத்தில் தான் இந்த தீயவினைகளை மாந்திரீகன் எனும் சத்ரு ஏவி விடுவான்.

அப்போது நம்மை காக்க ஒரு சக்தி வேண்டும் அல்லவா? இதை தடுக்க ஒரு மாபெரும் ஆற்றல் வேண்டும் அல்லவா? அந்த மாபெரும் ஆற்றல் கொண்டவள் தான் வாராகி, மாந்திரீகம், ஏவல், பேய் பிசாசுகளிடமிருந்து நம்மை காக்கும் வலிமையான தெய்வம் இந்த பிரபஞ்சத்தில் வேறு தெய்வம் ஏதும் இல்லை என்பது தான் உண்மை. ஏவல், பில்லி சூனியம், யாவையும் தவிடு பொடியாக்கிடவே கையில் உலக்கை வைத்திருக்கிறாள்.

வாராகி என்ற பெயர் சொன்னாலே இவையாவும் ஓடி ஒளிந்து கொள்ளும், வாராகி வழிபாடு செய்பவர்களை இந்த கெட்ட சக்தி என்றைக்குமே நெறுங்காது. ஆக இந்த கெட்ட துர்சக்திகளிடமிருந்து நம்மை விழுந்து காக்க தான் அன்னைக்கு நாம் இரவு நேர வழிபாடுகளை செய்ய வேண்டும்.

“வீற்றிருப்பாள் நவ கோணத்தில் நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள் கலி வந்தனுகாமல் என் கண் கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றகுச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குல தெய்வம்”

-என்கிறது வாராகி மாலை

9 வடிவங்களில் வீற்றிருந்து காத்து வருபவளாம் அன்னை கலி என்ற ஒன்று நம்மை நெறுங்காமல் பார்த்து இருப்ப அல்லள் எங்கே நடக்கிறது. என்று இரவு பகலாக, கண்விழித்து காத்து கொண்டு தன் பக்தனை பாதுகாப்பவளாம். இந்த பாதுகாப்பிற்கு தானே நாம் ஆயிரம் ஆலயம் செல்கின்றோம், இவள் ஒருவரை சரணடைந்தால் நாம் அனைத்து தொல்லைகளிலிருந்தும், விடுபடுகின்றோம் என்பது புலப்படுகிறது அல்லவா.

ஜோதிடப்படி இரவு நேர வழிபாட்டின் சூட்சமம்

ஜோதிடத்தில் இரவுக்கு அதிபதி சனி- கருப்பு இருட்டு, புதர், எல்லாம் சனி ஆதிக்கம் செய்யும் இடமாகும், நவகிரகங்களிலே இவர் ‘கர்மகாரகன்’ என்று அழைக்கப்படுகிறான். நீதிமதான் இவனே செய்த தவறுக்கு பாரபச்சமின்றி தண்டனை வழங்குபவன். மக்கள் அலறி ஓடுவது எல்லாம் 7 என்ற இவர் காலம் வரும் போது தான்.

இவர் பார்வையில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்ப இயலாது. ஒரு வனை கோட்டையிலிருந்து குடிசைக்கு கொண்டு வரும் பார்வை வலிமை சனிபகவானுக்கு உரியது. ஈசன் முதல் சகல தேவர்களையும் ஆட்டி வைத்த வரலாறு இவருக்கு உண்டு, இவர் கட்டுப்பட்டு நிற்கும் ஒரே கடவுள் வாராகி மட்டுமே. வாராகி பக்தனை ஒரு போதும் சனிபகவான் நெறுங்குவதே கிடையாது ஏனெனில் கரிய நிறம், எருமை, இதன் எல்லாம் சனி ஆதிக்கம், ஆகவே இவர் ‘ஆயுள்காரகன்” என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணத்தினாலே ஆயுள் முடிக்கும் இறைவன் எமதர்மன் எருமையை வாகனமாக வைத்துள்ளார்.

இந்த எருமையையே வாகனமாக கொண்டு அவதரித்தவள் இந்த வாராகி , தேவர் மூவர் யாவரும் அடிபணிந்து வணங்க தக்க தெய்வ வடிவானவள் இவளை வணங்கும் யாரையும் சனி பகவான் நிச்சயம் தீண்டமாட்டார் என்பது முற்றி லும் உண்மை, வணங்கி பாருங்கள் அனு பவத்தால் உணர்வீர்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
krittika-Nakshatra

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரகாரர்களின் குணநலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1-ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் 1-ம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4-ம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ,இ,உ,எ ஆகி யவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகியவை.

குண அமைப்பு :

கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள்.

குடும்பம் :

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கராராக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.

செவ்வாய் தோஷம் நீங்கும் ஆடிக்கிருத்திகை வழிபாடு

செவ்வாய் தோஷம் நீங்கும் ஆடிக்கிருத்திகை வழிபாடு
chevvai-dosham-control-aadi-krithigai

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபாடு செய்தால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் செவ்வாய் தோஷ தடைகள் நீங்கும்.

ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம்,

மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள்,

பிரச்சினைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்.

ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி?

ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி?
aadi-krithigai-viratham-doing-method


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத் தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருக பக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதி நீராடிய திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும்.

தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம், கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை கூறி மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவு உண்ண வேண்டும்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக் கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். வேறு சிலரும் இவ்விரதம் மேற்கொண்டு நற்கதி அடைந்தார்கள்.

ஆடி கிருத்திகை விரதம் - சகல சவுபாக்கியங்களும் தரும்

 ஆடி கிருத்திகை விரதம் - சகல சவுபாக்கியங்களும் தரும்

       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம். சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம். சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள்தங்கள் பிரார்த்தனைக்களையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.

அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

திருவேற்காடு கருமாரி விரதம் இருந்து வழி படவேண்டிய நாளும், பலன்களும்

திருவேற்காடு கருமாரி விரதம் இருந்து வழி படவேண்டிய நாளும், பலன்களும்
Thiruverkadu-karumariamman


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித்தாயினை அவள் சந்நிதிக்கு சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே பெறலாம்.

கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித்தாயினை அவள் சந்நிதிக்கு சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே பெறலாம். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமையும்.

மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன்மக்களைப் பெற்றுள்ளனர். தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன.

திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-

ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.

தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.
தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.
தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.

பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.
பூர நட்சத்திரம் - கலைகளில் வல் லமை பெறலாம்.
சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறை வேறும்.

புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.
நவராத்திரி நாட்கள் - பிரார்த்தனைகள் நிறைவேறும்

முருகப்பெருமானோடு பேசிய அப்பரானந்தர்

முருகப்பெருமானோடு பேசிய அப்பரானந்தர்
siddhar-worship

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்பரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது.

அப்பரானந்த சுவாமிகளுக்கு இறையருள் கிடைத்ததையும், சொக்கம்பட்டி ஜமீன் அவரின் பக்தராக மாறியதையும், அப்பரானந்த சித்தர் சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்து அரியணையில் அமர்ந்தபோது, எட்டயபுரம் ஜமீனின் தலைமைப் புலவரான கடிகை முத்து புலவர் வந்து, ‘யார் இந்த பரதேசி?. இவனுக்கு ஏன் இந்த மரியாதை’ என்று கிண்டலாக கேட்டார்.

கடிகை முத்து புலவரின் கடுமையான சொல், அப்பரானந்த சித்தர் மீது பாய்ந்தவுடன் நிலைகுலைந்து போனார் சொக்கம்பட்டி ஜமீன்தார்.

‘இவர் எனக்கு ஞானகுரு. என் பிறவித் துயர் தீர்க்கும் மெய்க்குரு' என பதறியபடி கூறினார்.

அதற்கும் எகத்தாளமான சிரிப்பை உதிர்த்தார் கடிகை முத்து புலவர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடிகை முத்து புலவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில் அப்பரானந்த சித்தர் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரின் வாதங்களையும் சிரித்தபடியே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

நாட்கள் கடந்தன.

எட்டயபுரம் வந்த கடிகை முத்து புலவருக்கு கன்னத்தில் புற்று நோய் உருவாகி விட்டது. இதனால் அன்னம், தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்தார். வலியால் துடித்தார். சங்கரன்கோவில், திருச்செந்தூர் என ஒவ்வொரு தலங்களாகச் சென்று, இறைவனைப் பாடி சுகம் அளிக்கும்படி வேண்டினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஒரு முறை திருச்செந்தூரில் வழிபட்ட கடிகை முத்து புலவர், இரவு நேரத்தில் ஆலயம் முன்பாக உள்ள கடற்கரையில் படுத்து கண் அயர்ந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ‘என்னுடைய சீடனை நீ பழித்து விட்டாய். நெட்டூர் போ.. அவன் கையால் உணவு வாங்கி சாப்பிடு. எல்லாம் சரியாகிவிடும்’ என்றார்.

அதிர்ந்து போன புலவர், விடிந்தும் விடியாததுமாக நெட்டூர் வந்து சேர்ந்தார். அங்கு தியானத்தில் இருந்த அப்பரானந்த சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

இப்போதும் சிரித்தபடியே கடிகை முத்து புலவரைப் பார்த்தார் அப்பரானந்த சித்தர். பிறகு தான் தவப்பிச்சையாக பெற்று வைத்திருந்த அன்னத்தை புலவரின் கன்னத்தில் தேய்த்தார். தான் தவப் பிச்சை எடுத்து வரும் உணவை மூன்று நாட்கள் சாப்பிடும்படி கூறினார். புலவரும் அப்படியே செய்தார்.

என்ன ஆச்சரியம்.. புலவரின் நோய் பூரணமாக தீர்ந்து போனது. ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், கடிகை முத்து புலவர்.

அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘அப்பரானந்த ஆனந்த மாலை' என்ற பாடல் தொகுப்பைப் பாடி, நன்றியுடன் சித்தர் வசம் அதைச் சமர்ப்பித்தார். அதன்பிறகு எட்டயபுரம் புறப்பட்டுச் சென்றார்.

ஒரு முறை சித்தரை தரிசிக்க வந்த சொக்கம்பட்டி ஜமீன்தார், ‘சுவாமி! நான் திருச்செந்தூர் செல்கிறேன். என்னுடன் பல்லக்கில் எழுந்தருள வேண்டும்' என்றார்.

அதற்கு சித்தர், ‘எனக்கு சிவிகை வேண்டாம். உனக்கு முன் நான் திருச்செந்தூர் வந்து சேர்ந்து விடுவேன்' என்று கூறிவிட்டு, அங்கிருந்த மருதமரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டார்.

இதையடுத்து ஜமீன்தார் திருசெந்தூர் புறப்பட்டார். வழியில் அவருக்கு கடுமையான நீர் தாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது சேவகனின் முன்பு தோன்றிய அப்பரானந்த சித்தர், ‘தென் கீழ்த்திசையில் போய் பார் தண்ணீர் கிடைக்கும்' என்றார். அது போலவே தண்ணீர் இருந்தது.

ஜமீன்தாருக்கு முன்பாகவே திருச்செந்தூர் ஆலயம் வந்த அப்பரானந்த சித்தர், சேவகன் வடிவில் ஆலய நிர்வாகத்தினரிடம் ‘சொக்கம்பட்டி ஜமீன்தார் நாளை வருவான்' எனக் கூறி மறைந்தார்.

மறுநாள் ஜமீன்தாரை வரவேற்க ஆலய குருக்கள் காத்திருந்தனர். ஆச்சரியமுற்ற ஜமீன்தார், சுவாமி நேற்று இரவே இங்கு வந்து விட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, அங்கேயே தங்கினார் ஜமீன்தார்.

இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்பரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது. நேராக முருகப்பெருமான் சன்னிதிக்குச் சென்ற சித்தர், ‘குருவே, நான் சித்தி அடைவது எப்போது?' எனக் கேட்டார்.

அப்போது அங்கு ஒரு குரல் கேட்டது. பேசியது முருகப்பெருமான் தான். ‘அப்பரானந்தா! இன்னும் 24 மாத காலங்களுக்கு உனக்கு பணி உள்ளது. பெற்றோரின் கடன் முடித்த பிறகே உனக்கு சித்தி கிடைக்கும், நீ.. வணங்கும் வேல் அருகிலேயே உனக்கு சமாதி வைப்பார்கள். அதன் பின் கர்ப்பக்கிரகத்தில் தற்போது நீ வேல் வைத்து வணங்கிய இடத்தில், என்னை பிரதிஷ்டை செய்வார்கள். என்னை வணங்கும் பக்தர்கள் அனைவரும் உன்னையும் வணங்குவார்கள்' என கூறி அருளினார்.

இறைவனை தரிசித்து விட்டு வெளியே வந்தார் சித்தர். அனைத்தையும் வெளியே இருந்து கவனித்துக் கொண்டிருந்த சொக்கம்பட்டி ஜமீன்தாரின் சேவகன், ஆச்சரியத்துடன் இதுபற்றி ஜமீன்தாரிடம் கூறினான். அவருக்கு, முருகப்பெருமானுடன் பேசும் ஆற்றல் பெற்றவர் சித்தர் என்பதில் எல்லையில்லாத மகிழ்ச்சி.

உடனடியாக சித்தரைப் போய் சந்தித்த ஜமீன்தார், ‘சுவாமி! நான் குழந்தை பேறு இல்லாமல் தவிக்கிறேனே. இதற்கு அருள்புரியமாட்டீர்களா' என்று வேண்டினார்.

‘உனக்கு மகன் பிறப்பான். அதற்காக நீ.. செந்தூரில் உள்ள சரவணப் பொய்கையைச் சீர் செய்யவேண்டும்' என்றார் சித்தர். மறுநிமிடமே சரவணப்பொய்கையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார் ஜமீன்தார்.

பின்னர் சொக்கம்பட்டி திரும்பும்போது, தனது தாகம் தீர்த்த சுனையைத் தேடினார். ஆனால் அந்த சுனை அங்கே இல்லை. எல்லாம் சித்தரின் செயல் என்று நினைத்தபடி அரண்மனை வந்து சேர்ந்தார். அப்பரானந்த சித்தர் கூறியபடியே ஜமீன்தாருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

காலங்கள் கடந்தன. முருகப்பெருமான் சொன்னபடியே தனது தாய் தந்தைக்கு இறுதி மரியாதை செய்து விட்டு, நெட்டூரில் தவப்பிச்சை அன்னத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் அப்பரானந்த சித்தர். வேலுக்கும் தவறாமல் பூஜை செய்தார்.

இந்த நிலையில் இருளகற்றி அம்மையின் இறுதி காலத்தை சித்தர் உணர்ந்தார். அவரை தவம் செய்யும்படி சித்தர் பணித்தார். இருளகற்றியம்மை தவம் இருந்தார். அவரது உயிர் ஒளியில் கலந்தது. அவரது ஒடுக்கத்தை தான் அடங்கப்போகிற இடத்திற்கு அருகில் தன் கையாலேயே அமைத்தார். சித்தரின் தமக்கை முத்தம்மையும் அந்த ஆலய வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டார்.

அது ஒரு ஆனி மாதம் வியாக்கிழமை பூச நட்சத்திரம். அப்பரானந்த சித்தர், சொக்கம்பட்டி ஜமீன் மற்றும் பக்தர்களை அழைத் திருந்தார். பின் அவர்களை நோக்கி, ‘எனது இறுதி காலம் வந்து விட்டது. இருளகற்றிக்கு வடக்கில் என்னை அடக்கம் செய்யுங்கள். நான் ஒடுங்கியப் பின் இறைவனுக்கும் வேற்படைக்கும் உண்மையான அன்போடு பணி செய்யுங்கள். இந்த இடத்தில் நற்பணி செய்ேவாருக்கு எல்லா அறப் பயன்களும், பொருளும், இன்பமும் கிட்டும். அவர்கள் அனைவரும் முக்தியும் அடைவார்கள்’ என்று அருளினார்.

மேலும் ‘இந்தச் சன்னிதியில் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்யுங்கள். எல்லா தேவர்களும் துதி செய்ய அவர் இங்கு வந்து கோவில் கொள்வார்’ என்றார்.

அனைவரும் சூழ்ந்து நிற்க, அப்பரானந்தர் சிற்றாற்றில் நீராடினார். புலித் தோலை ஆசனமாக விரித்து வடக்கு நோக்கி பத்மா சனத்தில் அமர்ந்தார். சின்முத்திரைக் காட்டி அருட் சமாதி நிலையில் ஒன்றினார். எல்லாரும் அதிசயிக்குமாறு மேலேழுந்த ஒரு சோதி வான் நோக்கிச் சென்றது.

அதன்பின் அப்பரானந்த சித்தர் அருளியபடியே ஆலயம் அமைக்கப்பட்டது. கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்தார்கள். தற்போது இந்த ஆலயம் சுப்பிரமணிய சுவாமி, அப்பரானந்த சுவாமிகள் ஆலயம் என்றே போற்றப்படுகிறது.

அப்பரானந்த சுவாமிகளின் குருபூஜை ஆனி மாத பவுர்ணமியில் நிகழ்த்தப்படுகிறது. இக்கோவிலில் திருச்செந்தூரில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும்.

ஆனி திருவிழா தான் இக்கோவிலில் மணிமகுட திரு விழாவாகும். இவ்விழாவில் அன்ன பிச்சை வழங்கப்படும். இதற்காக அன்னம் குவிக்கப்பட்டு, சுவாமி மற்றும் அவரின் குருநாதரின் பாதக்குறடுகள், கைத் தண்டுகள் படையலில் வைத்து பூஜை செய்யப்படும். இச்சமயம் அப்பரானந்த சுவாமி களும் இவரது குருநாதர் குழந்தை முத்தானந்தா சுவாமிகளும் இங்கே வந்து அருளி நிற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அன்ன பிச்சையை சாதுக்கள் பக்தர்களுக்கு வழங் குவார்கள். அதை உண்ணும் மக்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. குறிப்பாக குழந்தை வரம். தடைபட்ட திருமணம் நடந்தேறுகிறது. கடன் தீர்ந்து தொழில் பெருகுகிறது. நாள் பட்ட நோய் தீருகிறது.

தினமும் இக்கோவிலின் நடை காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

சித்தர் அருளிய 11 கடமைகள்

தன்னை வணங்க வரும் பக்தர்களிடம், அப்பரானந்த சித்தர் 11 கடமைகளை கடைப்பிடிக்கும்படி கூறிவந்தார். ஞானத்தின் தொடக்கமான அந்த கடமைகளில், ‘சிவனது மலரடிகளில் மலர் தூவி வழிபட்ட பின்பே உண்ணுதல். பசுந்தழைகளை பசு உண்ணக் கொடுத்தல், கதிரவனை வணங்குதல், உண்ணும் போது பிறருக்கு கொடுத்து உண்ணுதல், இனியச் சொற்களையே எல்லோரிடத்திலும் பேசுதல், நமசிவாய என்ற ஐந்தெழுத்தை இடைவிடாது ஓதுதல், நன்மை பெருகும் காலத்திலும் நிலைத்த வாய்மையைப் போற்றுதல், தொண்டு செய்வோர்களையும் இறைவனையும் வாழ்த்துதல், தாய் தந்தையர், குரு, தெய்வங்களைப் பேணும் அன்பு, எல்லா உயிரையும் தன்னுயிர் என எண்ணுதல், ஞான குரு உபதேசத்தினைக் கேட்பது’ போன்றவை அந்த கடமைகளாகும். இக்கடமையை நிறைவேற்றும் போது அறிவு நிறையும், வீட்டின் இன்பத்துக்கும் குறை ஏற்படாது என்பது சித்தரின் வாக்கு.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது ஆலங்குளம். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் அழகிய பாண்டிய புரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை, சோழச்சேரி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிலும் நெட்டூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.