அபிஷேக திரவியங்கள் தரும் பலன்

அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம்

அபிஷேக திரவியங்கள் தரும் பலன் :
****************************************

சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும்,

மணம் உள்ள தைலம் - சுகம் தரும்,

பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும்,

பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும்,

நெய் - மோக்ஷம் அளிக்கும்,

பால் - வாழ்நாள் வளர்ச்சி,

தயிர் - மக்கட் செல்வம் தரும்,

மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும்,

தேன் - சுகம் தரும்,

பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும்,

வாழைப்பழம் - பயிர் செழிக்கும்,

பல்லவம் - உலகை வயப்படுத்தும்,

மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும்,

மாதுளை - கோபத்தை நீக்கும்,

கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும்,

நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும்,

எலுமிச்சை - மரணபயம் நீக்கும்,

சர்க்கரை - பகை களையும்,

இளநீர் - இன்பங்கள் நல்கும்,

அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும்,

சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.

பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.

பஞ்சாமிர்தம் இரு வகை :

(1) ரஸ பஞ்சாமிர்தம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது.

(2) பல (பழ) பஞ்சாமிருதம் - மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது

நாகப்பழம் : மாதுளை, எலுமிச்சை, புளி, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா - ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை.